இம்பால், ஜூன் 15 - மணிப்பூரில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காய மடைந்த நிலையில், அவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமென்லோக் என்ற கிராமத்தில் இந்த வன்முறை அரங்கேறி யுள்ளது. மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலை யொட்டி, பெரும்பான்மை சமூகமான ‘மெய்டெய்’ மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, அவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தருவதாக பாஜக பிரச்சனையை ஆரம்பித்துவைத்தது. பாஜக-வின் இந்த அறிவிப்புக்கு எதிராக, குக்கி - நாகா உள்ளிட்ட பழங்குடி அமைப்பு க்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டமானது, ஒருகட்டத்தில் மெய்டெய் மற்றும் பழங்குடியினருக்கு இடையிலான நேரடி மோதலாக மாறி, மாநிலம் தழுவிய வன்முறையாக உரு வெடுத்தது. மோதல், படுகொலை, துப்பா க்கிச்சூடு சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கான வீடுகள், வர்த்தக நிறுவனங் கள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணு வம் என 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாட்கள், மணிப்பூரிலேயே முகாமிட்டும், ஒரு மாதத் திற்கும் மேலாக வன்முறை கட்டுக்குள் வந்தபாடாக இல்லை. மாநில ஆளுநர் அனு சுயா உய்கே தலைமையில் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைதிக் குழு ஒன்றும் அமித்ஷா-வால் அறிவிக்கப் பட்டது. 51 பேர் குழுவில் இடம்பெறச் செய்யப்பட்டனர். ஆனால், பாஜக முதல்வர் பைரேன் சிங் குழுவில் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி சமூகத்தினர், அமைதிக்குழு கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனிடையே மணிப்பூரில் வழக்கம் போல வன்முறை தொடர்ந்து வருகிறது. புதனன்று இரவு 10.30 மணியள வில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் நடத்திய குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படு காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர் கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமென்லோக் என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள் ளது. முதலில், காமென்லோக் கிராமத்தில் உள்ள வீடுகள் மீது ஆயுதக் குழுக்கள், குண்டுகளை வீசி உள்ள னர். இதில், வீடுகளில் இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள் ளனர். இந்த குண்டு வீச்சில் இருந்து தப்பிக்கும் நோக்கில் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் மீது ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதிலும், பலர் உயிரிழப்பிற்கும், படுகாயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றனர்.
மணிப்பூர் பெண் அமைச்சர் நெம்சா கிப்ஜெனின் வீடும் வன்முறை யாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள் ளது. மெய்டெய் இனக்குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து கருத்து தெரி வித்துள்ள சிஎல்பி (Congress Legislature Party) தலைவரும், முன்னாள் முதல்வரு மான ஓக்ராம் இபோபி, “மணிப்பூரில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்த போது பாஜக மூத்த தலைவர்கள் பலரும் மணிப்பூருக்கு வந்த வண்ணம் இருந்த னர். ஆனால், இன்று அவர்கள் யாரும் இங்கு வருவதில்லை. மே 3 முதல் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தும் பிரதமர் மோடி இதுகுறித்து பேச மறுக்கிறார். 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தில்லிசென்று இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரில் வலியுறுத்த இருக்கிறோம். மாநில அரசும், இந்த வன்முறை குறித்து விவா திக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.